பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள பி.என்.புதூரில் விடுதலைப் போராட்ட மாவீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவராக பணியாற்றிய வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் சனிக்கிழமை (மார்ச் 22) சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலி நிகழ்வில், விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்ச்சிக்கு பி.என்.புதூர் கிளையைச் சேர்ந்த விதாத் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக பணியாற்றிய தோழர் வே.கௌதம்குமார் 2024-ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். சிகிச்சையில் இருந்தபோதிலும் பலனளிக்காததால் மார்ச் 22-ல் அகால மரணமடைந்தார்.







விடுதலைப் போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் பிறந்து, அதே மாவீரன் தூக்கிலிடப்பட்ட நாளில் உயிரிழந்த தோழர் கௌதம்குமார், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கிய அவரது தியாக உணர்வு பலரை உந்துதல் அளித்துள்ளது.

1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ல் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த இவர்களின் தியாகம் இன்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...