அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்த ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் அவினாசி சாலையில் மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். சாலையோர வடிகால்களில் சிறு துளைகள் இடும் பணி குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (17.10.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட அவினாசி சாலை பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில், சாலையின் இரு புறங்களிலும் உள்ள வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய அளவிலான துளைகள் இடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின் போது, துளைகளிடும் பணியை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...