திருப்பூரில் குப்பை கொட்டும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் முதலிபாளையத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார பிரச்னைகளை எதிர்த்து, பொதுமக்கள் குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தினசரி 600 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு, முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கல் குவாரி குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுவாசக் கோளாறு மற்றும் சரும நோய் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்னை குறித்து பலமுறை மாநகராட்சியில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



இந்நிலையில், முதலிபாளையம் மற்றும் சென்னிமலை பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குப்பை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...