திருப்பூரில் சிலிண்டர் கசிவு: பள்ளி மாணவிக்கு 75 சதவீதம் தீக்காயம்

திருப்பூர் வஞ்சிபாளையத்தில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து. 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) 75 சதவீதம் தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. தந்தைக்கும் காயம்.


திருப்பூர்: திருப்பூர் இடுவாய் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் இன்று காலை சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) மற்றும் அவரது தந்தை ஜீவா (44) தீக்காயமடைந்தனர்.

ஜீவா தனது மனைவி மகாலட்சுமி (36) மற்றும் இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது மகள்கள் ஸ்ரீமதி (13) மற்றும் கௌசல்யா (11) இடுவம்பாளையம் அரசு பள்ளியில் முறையே 8 மற்றும் 6ஆம் வகுப்பு பயின்று வந்தனர்.



காலை வேளையில் வீட்டில் சிலிண்டர் மாற்றும்போது, வாஷர் வழியாக எரிவாயு கசிந்து தீப்பற்றியது. மகாலட்சுமி தனது மகள் ஸ்ரீமதியுடன் வெளியேறினார். ஜீவா உள்ளே சென்று கௌசல்யாவை மீட்டார். இதில் கௌசல்யா மற்றும் ஜீவா தீக்காயமடைந்தனர்.

இருவரும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜீவாவிற்கு கைகளில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கௌசல்யாவிற்கு உடல் முழுவதும் 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

கௌசல்யாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீரபாண்டி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...