கோவையில் ASFASM சங்கத்தின் மாநில மாநாடு: NIRF தரவரிசையில் இடம்பெற்ற கல்லூரிகளுக்கு விருது

கோவையில் ASFASM சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு நடைபெற்றது. NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. உயர்கல்வியின் தரம் மற்றும் NIRF மதிப்பீட்டு முறை குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் ஜிவி ஹாலில் ASFASMTN (Association of Self-financing Arts, Science & Mangement Colleges of Tamilnadu) சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், NIRF (National Institutional Ranking Framework) 2024 தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ASFASMTN சங்கத் தலைவரும் ஏஜேகே கல்லூரி தலைவருமான பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, கற்பகம் உயர்கல்வி நிறுவன வேந்தர் முனைவர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



முனைவர் அஜித் குமார் லால் மோகன் தனது உரையில், உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும், NAAC, NIRF போன்றவை கல்வி நிறுவனங்களுக்கு தர நிர்ணய அளவுகோல்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். கல்லூரிகள் தங்கள் தரவரிசையை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முனைவர் ராமசாமி NIRF தரவரிசை நடைமுறைகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். முனைவர் கீதாலட்சுமி, NIRF தரவரிசையில் உள்ள ஒப்பீடுகள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

நிகழ்வின் இறுதியில், NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, NIRF குறித்த பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...