கோவையில் ASFASM சங்கத்தின் மாநில மாநாடு: NIRF தரவரிசையில் இடம்பெற்ற கல்லூரிகளுக்கு விருது

கோவையில் ASFASM சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு நடைபெற்றது. NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. உயர்கல்வியின் தரம் மற்றும் NIRF மதிப்பீட்டு முறை குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் ஜிவி ஹாலில் ASFASMTN (Association of Self-financing Arts, Science & Mangement Colleges of Tamilnadu) சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், NIRF (National Institutional Ranking Framework) 2024 தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ASFASMTN சங்கத் தலைவரும் ஏஜேகே கல்லூரி தலைவருமான பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, கற்பகம் உயர்கல்வி நிறுவன வேந்தர் முனைவர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



முனைவர் அஜித் குமார் லால் மோகன் தனது உரையில், உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும், NAAC, NIRF போன்றவை கல்வி நிறுவனங்களுக்கு தர நிர்ணய அளவுகோல்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். கல்லூரிகள் தங்கள் தரவரிசையை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முனைவர் ராமசாமி NIRF தரவரிசை நடைமுறைகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். முனைவர் கீதாலட்சுமி, NIRF தரவரிசையில் உள்ள ஒப்பீடுகள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

நிகழ்வின் இறுதியில், NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, NIRF குறித்த பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...