கோவை: மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

கோவை சிங்காநல்லூர் அருகே கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும், கால்வாய்கள் நிரம்பியும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மின்சாரத் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிங்காநல்லூர் அருகே உள்ள கதிரவன் கார்டன் பகுதியில், வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில், அவர்களது குடியிருப்பு பகுதிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



மக்கள் அமைச்சரிடம் சாலைகள் அமைத்துத் தருமாறும், வாய்க்காலை முறையாகப் பராமரித்து மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...