இலங்கையை சேர்ந்த கோவை டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது


ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையை சேர்ந்த நிறுவனமான டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதற்கு உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் சபை உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசுக்கு கண்டணம் தெரிவித்திருந்தன.

ஆனால், இலங்கை அரசு மீது எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காமல் ஐ.நா. சபை காலம் தாழ்த்தி வந்தது. இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காமல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமான கோவையில் செயல்பட்டு வரும் டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை நிறுவனங்களை இந்தியாவிலிருந்து அகற்றப்போவதாகவும் கோஷங்களை எழுப்பியபடி பதாககைகளை கைகளில் ஏந்தி தமிழர் விடியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...