மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை பாலியல் தொழில் இடத்திற்கு அழைத்துச் சென்ற மூவர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற 30 வயது இளைஞரை பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் நேற்று கோவைக்குச் சென்று திரும்பி வந்தார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், தொடர் மழை காரணமாக ஆட்டோவில் வீடு செல்ல முடிவு செய்தார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி (33) என்பவர், இளைஞரை மேட்டுப்பாளையம் சாந்தி நகர் பகுதியில் உள்ள இரண்டு பெண்களிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற இளைஞரிடம் இரண்டு பெண்களும் தகாத முறையில் நடந்து கொண்டனர். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரமடை பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், திம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட 39 வயது பெண்ணை கோவை மாவட்ட பெண்கள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆட்டோவில் ஏற வந்த பயணியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...