குடிநீர் விநியோகம் குறித்து தவறான தகவல் - சூலூர் தென்றல் நகர் மக்கள் குற்றச்சாட்டு

சூலூர் கலங்கள் பஞ்சாயத்து தென்றல் நகர் மக்கள் குடிநீர் விநியோகம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் கோரி போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: சூலூர் கலங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

தென்றல் நகர் மக்கள் ஏற்கனவே குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில், தற்போது முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான பதில் அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை பரிசீலித்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 50க்கும் மேற்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த பொதுமக்கள் கூறுகையில், "அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், எங்கள் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கக் கோரியும் பல முறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

மேலும், அவர்கள் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...