அன்னூர் அருகே அறுந்த மின் கம்பி: பொதுமக்கள் புகார் மீது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரியாம்பாளையம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான ஒன்னக்கரசம்பாளையத்தில், சாலையூர் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில், மின் வழித்தடத்தில் உள்ள ஒரு கம்பி 90 சதவீதம் அறுந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்வாரிய அதிகாரிகளோ இதனை பொருட்படுத்தாமல், அந்த மின் கம்பி அறுந்துள்ள இடத்தில் உள்ள விவசாய தோட்ட உரிமையாளரே தனது சொந்த செலவில் சரி செய்து கொள்ள வேண்டும் என கூறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அரசுத்துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழலில், மின்வாரிய அதிகாரிகளின் இந்த அலட்சியம் மனித உயிர்களை பறிக்கும் முன் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஊர் மக்கள் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணை முதல்வர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறும் நிலையில், மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...