கோவை: அபார்ட்மெண்ட் குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலப்பு - குடியிருப்பாளர்கள் அவதி

கோவை கள்ளிமடையில் உள்ள அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் குடியிருப்பாளர்கள் பாதிப்பு. அருகிலுள்ள வில்லா நிர்வாகத்தின் செயல்பாடு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிமடையில் உள்ள ஆகாஷ் வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டுக்கு இடையே பொதுவான கழிவுநீர் குழாய் உள்ளது. வில்லா சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகராட்சி கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வில்லா அசோசியேஷன் நிர்வாகிகள் கழிவுநீர் செல்லும் வழியை அடைத்துவிட்டனர். இதனால் மழைநீர், கழிவுநீர் அனைத்தும் அபார்ட்மெண்ட்டுக்குள் புகுந்து, 4,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியில் கலந்தது.



இதனால் குடிநீர் மாசுபட்டுள்ளதாக அபார்ட்மெண்ட் அசோசியேஷன் தலைவர் கண்ணன் தெரிவித்தார். குடிப்பதற்கு வெளியிலிருந்து தண்ணீர் கேன்கள் வாங்கி குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வாந்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...