மோசமான வானிலையால் துபாய் - கோழிக்கோடு விமானம் கோவையில் அவசர தரையிறக்கம்

துபாயில் இருந்து கோழிக்கோடு செல்லும் 'பிளை துபாய்' விமானம், கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


கோவை: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இன்று (அக்டோபர் 12) காலை சென்று கொண்டிருந்த 'பிளை துபாய்' நிறுவனத்தின் விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானம் அரை மணி நேரத்துக்கும் மேலாக காற்றில் சுற்றியது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் இன்று அக்டோபர் 12 காலை 7.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. வானிலை சீரடைந்த பின்னர் விமானம் கோழிக்கோடுக்கு புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...