மோசடி வழக்கில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரின் மாமனார் உள்பட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்துசாமி மகன் துரைசாமி. இவரின் சகோதர்கள் சுந்தரம் மற்றும் தனபால். இந்த மூவரும் பங்குதாரராக உள்ள வணிக வளாகம் கோவை அவிநாசி சாலையில் உள்ளது.இந்நிலையில் வணிக வளாகத்தின் ஒப்பந்த பத்திரத்தில் துரைசாமியின் பெயரை நீக்கி புதியதாக பத்திரத்தை சுந்தரம் மற்றும் தனபால் தயார் செய்துள்ளனர். மேலும், துரைசாமிக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தனர். ஒப்பந்த பத்திரத்தில் பெயரை நீக்கியும், வணிக வளாகம் மூலம் கிடைக்கும் வருவாயை தனக்கு தராமல் மோசடி செய்ததாக துரைசாமி, கடந்த 2001-ஆம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி,ஒப்பந்தத்தை அழித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் எண் 3-இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வேலுசாமி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில், சுந்தரம், தனபால் ஆகியோர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங் காவல் சிறை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதில், சுந்தரம், தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய் பாஸ்கரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...