மேட்டுப்பாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாதாந்திர மின் கட்டண கணக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



கோவை: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அண்மையில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.



உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உள்ளிட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் உயர்த்தப்பட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...