மேட்டுப்பாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாதாந்திர மின் கட்டண கணக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



கோவை: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அண்மையில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.



உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உள்ளிட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் உயர்த்தப்பட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...