கோவை கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூரில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று (அக்டோபர் 11) காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென கனமழை பொழிந்தது. இந்த எதிர்பாராத மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி, மழை நிற்பதற்காக காத்திருந்தனர்.

அதேசமயம், துடியலூர் பேருந்து நிலையம் மற்றும் கரிகடை அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்டோபர் 10) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை மற்றும் மதிய நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்யத் தொடங்கியது.

இந்த திடீர் மழையால் துடியலூர் பகுதியிலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழை நிற்கும் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். இந்த எதிர்பாராத மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...