கோவை கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூரில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று (அக்டோபர் 11) காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென கனமழை பொழிந்தது. இந்த எதிர்பாராத மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி, மழை நிற்பதற்காக காத்திருந்தனர்.

அதேசமயம், துடியலூர் பேருந்து நிலையம் மற்றும் கரிகடை அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்டோபர் 10) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை மற்றும் மதிய நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்யத் தொடங்கியது.

இந்த திடீர் மழையால் துடியலூர் பகுதியிலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழை நிற்கும் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். இந்த எதிர்பாராத மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...