கோவை கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூரில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று (அக்டோபர் 11) காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென கனமழை பொழிந்தது. இந்த எதிர்பாராத மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி, மழை நிற்பதற்காக காத்திருந்தனர்.

அதேசமயம், துடியலூர் பேருந்து நிலையம் மற்றும் கரிகடை அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்டோபர் 10) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை மற்றும் மதிய நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்யத் தொடங்கியது.

இந்த திடீர் மழையால் துடியலூர் பகுதியிலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழை நிற்கும் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். இந்த எதிர்பாராத மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...