கோவையில் கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலையர் பள்ளி குழந்தைகள்

கோவை கோவைபுதூர் மழலையர் பள்ளியில் நவராத்திரி கொண்டாட்டம். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தெய்வங்களாக வேடமிட்டு, கொலு பொம்மைகளாக அணிவகுத்து நின்று அனைவரையும் கவர்ந்தனர்.



Coimbatore: கோவையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோவைபுதூர் மழலையர் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகளாக வேடமிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடும் வழக்கம் உள்ளது. இந்த வழக்கத்தை பின்பற்றி, மழலையர் பள்ளியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



அதிகாலை முதலே குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடங்களை அணிய தொடங்கினர். தர்மர், அர்ச்சுனர், பழனி முருகர், மதுரை மீனாட்சி, கருமாரியம்மன் என பல்வேறு தெய்வ வடிவங்களில் குழந்தைகள் காட்சியளித்தனர். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கொலு அலங்காரத்தில் நடைபெற்ற பூஜையில் இந்த குழந்தைகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கொலு பொம்மைகள் போல வேடமிட்ட குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அஷ்டலட்சுமி, தசாவதாரம், அறுபடை வீடு, பஞ்ச பாண்டவர், அம்மன், சிவன், ராமர் என ஒவ்வொரு குழுவாக தெய்வங்கள் போல வேடமிட்ட குழந்தைகள் தத்ரூபமாக கொலு பொம்மைகள் போல அணிவகுத்து நின்றனர்.



இந்த அழகிய காட்சி பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குழந்தைகளின் இந்த முயற்சி நவராத்திரி பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதோடு, இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்தது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...