கோவையில் கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலையர் பள்ளி குழந்தைகள்

கோவை கோவைபுதூர் மழலையர் பள்ளியில் நவராத்திரி கொண்டாட்டம். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தெய்வங்களாக வேடமிட்டு, கொலு பொம்மைகளாக அணிவகுத்து நின்று அனைவரையும் கவர்ந்தனர்.



Coimbatore: கோவையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோவைபுதூர் மழலையர் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகளாக வேடமிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடும் வழக்கம் உள்ளது. இந்த வழக்கத்தை பின்பற்றி, மழலையர் பள்ளியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



அதிகாலை முதலே குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடங்களை அணிய தொடங்கினர். தர்மர், அர்ச்சுனர், பழனி முருகர், மதுரை மீனாட்சி, கருமாரியம்மன் என பல்வேறு தெய்வ வடிவங்களில் குழந்தைகள் காட்சியளித்தனர். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கொலு அலங்காரத்தில் நடைபெற்ற பூஜையில் இந்த குழந்தைகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கொலு பொம்மைகள் போல வேடமிட்ட குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அஷ்டலட்சுமி, தசாவதாரம், அறுபடை வீடு, பஞ்ச பாண்டவர், அம்மன், சிவன், ராமர் என ஒவ்வொரு குழுவாக தெய்வங்கள் போல வேடமிட்ட குழந்தைகள் தத்ரூபமாக கொலு பொம்மைகள் போல அணிவகுத்து நின்றனர்.



இந்த அழகிய காட்சி பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குழந்தைகளின் இந்த முயற்சி நவராத்திரி பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதோடு, இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்தது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...