உடுமலை அருகே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் கவனம் ஈர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளியின் அறங்காவலர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் முருகேசன், உதவி தலைவர் சாதிக்பாட்ஷா, செயலாளர் சண்முக பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கண்காட்சியில் மாணவர்கள் செய்த செய்முறை மாதிரிகள், கலைப் பொருட்கள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களும் தங்களது கலைப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.



குறிப்பாக, இஸ்ரோ ராக்கெட்டுகளின் மாதிரி வடிவங்கள், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.





மாணவர்கள் உருவாக்கிய ரோபோடிக் அமைப்புகள், இதயம், நுரையீரல், வனவிலங்கு சரணாலயம், நீர்வீழ்ச்சி, சூரிய குடும்பம் ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகளும் பார்வையாளர்களை வியக்க வைத்தன.



பழங்கால நாணயங்கள், மண்பாண்டங்கள், மரச்சாமான்கள், பீங்கான்கள், பித்தளை மற்றும் செம்புப் பொருட்கள், எடைக்கற்கள், நவரத்தின கற்கள், ருத்ராட்ச மாலைகள், பழைய வானொலிகள், தட்டச்சு இயந்திரங்கள், தொலைபேசிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பகத் சிலம்பம் மற்றும் களரி பயிற்சிப் பள்ளியின் பழங்காலப் போர்க்கருவிகளும் இடம்பெற்றிருந்தன.

பாலைவனம், குளிர் பிரதேசம், வெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் வளரும் தாவரங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகள், மலர்ச் செடிகள் ஆகியவற்றின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள், "பள்ளியில் நடைபெற்ற கண்காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படும் இஸ்ரோ ராக்கெட்டுகள், போர் விமானங்கள் மாதிரிகள், பழங்கால போர்க்கருவிகள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு களித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்று தெரிவித்தனர்.

ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...