இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக இஸ்லாமியர்களை அலைகழிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி காவல்துறையினர், இஸ்லாமியர்களை அலைகழிப்பதாக பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்தனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை இதுவரை சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களக்க பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறுகயில், இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை துன்புறுத்தி வருகின்றனர். பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கின்றனர்.

விசாரணை என்ற பெயரில் பல முறை தொடர்ச்சியாக அழைத்து பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்று பல நாட்கள் வைத்துக்கொள்கின்றனர். போனில் யாருடன் பேசினாலும் விசாரித்து மனவுளைச்சளை ஏற்படுத்துகின்னர்" என்றனர். 

மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் சசிக்குமார் வழக்கை முடிக்கவில்லை என்பதால் பண ஆசை காட்டி இஸ்லாமியர்களை குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கின்றனர் என புகார் அளிக்க வந்த பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இஸ்லாமிய இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அமல்ராஜிடமும் இதுகுறித்தான மனுவினை அளித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...