உடுமலையில் வன உயிரின வார விழா: 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியப் போட்டியில் பங்கேற்பு

உடுமலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வனப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆர் ஜி எம் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா IFS அவர்களின் உத்தரவின்படி இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரண்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்தின.



இந்நிகழ்வில் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மாணவர்கள் வன உயிரினங்களும் வனப்பகுதியும் மனிதர்களின் சுயலாபத்திற்காக சிதைக்கப்படுவது குறித்து தத்ரூபமான ஓவியங்கள் வரைந்தும், கட்டுரைகள் எழுதியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வனத்துறை சார்பாக மாணவ மாணவியர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.



நிகழ்ச்சியின் முடிவில், ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலர் கீதா IFS, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் மணிகண்டன், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன், ஆர் ஜி எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு மூலம் மாணவர்களிடையே வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கலை திறமையையும் வெளிக்கொணர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...