மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்


குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக மதுபானக் கடையினை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் மது பாட்டில்களுடன் தரையில் படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை ஆவரம்பாளையம் பகுதியில் கோவில் மற்றும் குடியிருப்பு, தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அங்கு இருந்த மதுக்கடையை போராட்டம் நடத்தி கடை அப்புறபடுத்திய நிலையில் மீண்டும் அங்கு கடை அமைந்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...