கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி

கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சியை நடத்தியது. இதில் 28 பயணிகள் மற்றும் 2 ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்ததாக பாவனை செய்யப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் இணைந்து 'பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி'யை இன்று நடத்தியது. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்று, ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார்.

பேரிடர்காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களைக் காப்பாற்றும் 'கோல்டன் ஹவர்" என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.



இந்த ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில் இருபத்தெட்டு பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டது. பின்னர் பேரிடர்கால அவசரநிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, "மஞ்சள் குறியீடு" (Code Yellow) அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அவசரநிலை குழுக்களான தல மீட்பு குழு, உள் ட்ரைஜ் குழு, கார்டன் குழு, சால்வேஜ் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் மேலாண்மை குழு ஆகிய ஐந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அடுத்தடுத்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் என அனைத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக ஒத்திகை செய்யப்பட்டது.



இந்த ஒத்திகை பயிற்சி விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பெருமளவு காயமடைந்தவர்களை கையாள்வது மற்றும் விரைந்து திறம்பட நோயாளிகளை வகைப்படுத்தும் செயல்முறை பற்றி மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஒத்திகை பயிற்சியில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரிகள், கோவை ரயில் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என பலர் ஈடுபட்டனர். தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இந்த பரபரப்பான ஒத்திகை காட்சிகளை ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் உற்று நோக்கினர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...