திருப்பூர்-கோவை சாலையில் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து: பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர்-கோவை சாலையில் காற்று வீச்சால் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து. காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டு குவிகிறது.


திருப்பூர்: திருப்பூர் மற்றும் கோவை இடையேயான சாலையில் ஒரு தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்துரைச் சேர்ந்த 32 வயதான சுரேந்திரன் இயக்கி வந்தார். பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அவிநாசி பைபாஸ் சாலையில் பேருந்து செல்லும்போது, அதிக காற்று வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கி விழுந்தது. இதில் ஓட்டுனர் சுரேந்திரனின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பட்டு படுகாயம் ஏற்பட்டது.

எனினும், தனக்கு ஏற்பட்ட காயங்களை பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சுரேந்திரன் பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தப்பித்தனர்.

இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் சுரேந்திரனை பாராட்டி, அருகிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை - திருப்பூர் இடையே தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்காக பயணம் செய்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...