பொள்ளாச்சி: தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடக்கம்; உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா கோரிக்கை

பொள்ளாச்சியில் சிதலமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் சிரமம்.


கோவை: பொள்ளாச்சி, தேர்நிலையம் முதல் உஞ்சவேலம்பட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தென்மேற்கு பருவ மழையால் சிதலமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொள்ளாச்சியில் உள்ள தாராபுரம் ரோடு மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியான உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர். வாகனங்கள் தாராபுரம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும்போது, உடுமலையிலிருந்து வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உஞ்சவேலம்பட்டி அருகில் உள்ள தனியார் உணவகம் முன்பு சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து கார்கள் வரிசை கட்டி நிற்பதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஏற்கெனவே இந்த சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...