கோவை பார்க் குளோபல் பள்ளி மாணவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

கோவை பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த், குஜராத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.


கோவை: கோவை பார்க் குளோபல் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவர் ஒருவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2024 அக்டோபர் முதல் வாரத்தில் குஜராத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் கலந்து கொண்டார். இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பார்க் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, இந்த சாதனையை படைத்த மாணவரையும், அவருக்கு பயிற்சி அளித்து ஊக்குவித்த பயிற்சியாளரையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...