கோவை வ.உ.சி. பூங்காவில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. பூங்கா, உயிரியல் பூங்கா, முதியோர் பூங்கா, கணிதப் பூங்கா மற்றும் உணவுக்கூடத்தை ஆய்வு செய்தார். பூங்காக்களின் பராமரிப்பு மற்றும் புதிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள வ.உ.சி. பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண் 83-ல் அமைந்துள்ள இப்பூங்காக்களின் தற்போதைய நிலை குறித்து அவர் நேரில் பார்வையிட்டார்.

மேயர் ரங்கநாயகி, வ.உ.சி. பூங்கா வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணிதப் பூங்காவின் பணிகளை ஆய்வு செய்தார். இப்பூங்கா குழந்தைகளுக்கு கணித கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.



வ.உ.சி. பூங்கா எதிரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தையும் (Food Street) மேயர் பார்வையிட்டார். இந்த உணவுக் கூடம் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான உணவு வகைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



அடுத்ததாக, வ.உ.சி. முதியோர் பூங்காவை பார்வையிட்ட மேயர், பூங்காவின் தூய்மை நிலை குறித்து கேட்டறிந்தார். பூங்காவை சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.



ஆய்வின் ஒரு பகுதியாக, ராம் நகர் மற்றும் ஆர்.ஆர்.சாமி லைன் பகுதியில் மாநகராட்சியின் நவீன வாகனம் மூலம் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு பணிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டார். சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சுமா, செயற்பொறியாளர் கருப்பசாமி, கால்நடை மருத்துவர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...