அன்னூர் அருகே தனியார் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க இந்த செயலி உதவும்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மாணவிகள் எளிதாக காவல்துறையை அணுகி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவிநாசி காவல் நிலைய மகளிர் காவல் உதவி ஆய்வாளர் பத்மாவதி தலைமை வகித்தார். சேவூர் காவல் நிலைய தலைமை காவலர் அலமேலு மங்கை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து காவல்துறை பெண் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், 'போலீஸ் அக்கா' செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (8ஆம் தேதி) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Newsletter

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...