கோவையில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அம்மன் அர்ஜுனன் MLA தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான அம்மன் அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இந்த போராட்டம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



போராட்டக்காரர்கள் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். உடனடியாக சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இப்போராட்டத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், "விடியலை தருகிறேன் என்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருக்கிறார். இந்த ஐந்து ஆண்டுகள் எப்போது முடியும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.



மேலும் அவர், "அதிமுக ஆட்சி ஏழை எளிய மக்களுக்காகவே நடத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் பணக்காரர்கள் கூட வாழ முடியாது. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு செல்கின்றன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையில், தற்போது பஞ்சாலைகளை பார்க்கவே முடியவில்லை. அடுத்த தலைமுறையினருக்கு பஞ்சாலை உபகரணங்களை கண்காட்சியில் வைத்து தான் காட்ட வேண்டிய சூழல் கோவைக்கு வந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, "2026 ஆம் ஆண்டு யார் தடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மலரும்" என்று அம்மன் அர்ஜுனன் உறுதிபட தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...