மேட்டுப்பாளையத்தில் சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: தமிழ்நாடு அரசு அறிவித்த சொத்துவரி உயர்வை திரும்பப் பெற கோரி மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இரண்டாவது முறையாக 6 சதவிகித சொத்து வரியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் இரண்டாவது முறையாக சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், எனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.



மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மேட்டுப்பாளையம் உதகை சாலையில் வரிசையாக நின்று கை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே 50 சதவிகிதம் வரி உயர்வு அறிவித்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக 6 சதவிகிதம் வரி உயர்வுகளை அறிவித்து மக்கள் மீது சுமை ஏற்றி வரும் திமுக அரசைக் கண்டித்தும், மின்கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் போன்ற பல்வேறு வரி உயர்வைக் கண்டித்தும் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அம்மா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பி.டி கந்தசாமி மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட அதிமுகவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...