கோவை 27-வது வார்டில் தூய்மை பணி மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை 27-வது வார்டில் சாலையோர குப்பைகள் அகற்றம், டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் தினசரி குப்பை சேகரிப்பு ஆகியவற்றை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி உடன் இருந்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் பல்வேறு தூய்மை பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் உள்ள பிஎஸ்ஜி தொடக்கப்பள்ளி முன்பு சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டன. இந்த பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு, தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.



திருவேங்கடசாமி வீதி, ஆனந்த் திருவேங்கடசாமி வீதி மற்றும் பேர நாயுடு வீதி ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டதுடன், ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் தொட்டிகளில் அபெட் மருந்து ஊற்றப்பட்டது. இந்த பணிகளையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்து, விரைவில் முடிக்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



27-வது வார்டு பீளமேடு பகுதியில் தினசரி குப்பை சேகரிப்பு பணிகளையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். குப்பை வாங்கும் ஆட்டோக்கள் சரியாக வருகின்றனவா என்பதை உறுதி செய்து, சாலையோரங்களில் உள்ள அனைத்து குப்பைகளையும் முழுமையாக அகற்றுமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...