கோவையில் தொடர் தற்கொலை சம்பவங்கள்: கல்லூரி மாணவி மற்றும் இளைஞர் உயிரிழப்பு

கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி சேலையில் தூக்கிட்டும், குனியமுத்தூரில் இளைஞர் மின்விசிறியில் தூக்கிட்டும் உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி ஒருவரும், குனியமுத்தூரில் இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

முதல் சம்பவத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த அசோக் குமாரின் மகள் கனகவள்ளி (19), கோவை பி.என்.பாளையம் நேதாஜி நகரில் தனது சகோதரி பிரியதர்ஷினியுடன் தங்கியிருந்து பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அக்டோபர் 4 மாலை, கனகவள்ளி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் (39) மகன் ஹரிஷ் குமார் (19) தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்த ஹரிஷ் குமார், அக்டோபர் 4 இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவு 9 மணி அளவில் வீடு திரும்பிய அர்ச்சனா, மகனின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஹரிஷ் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சம்பவங்களிலும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...