வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலை 6 மணிக்குப் பின் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலக்குடி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைக் காண, மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் 'கபாலி' என்ற யானை இச்சாலையில் முகாமிட்டு வாகனங்களை விரட்டியது. தற்போது கடந்த சில நாட்களாக 'கணபதி' என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி சாலையில் நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறை, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் வனப்பகுதியை ஒட்டியே சாலை அமைந்துள்ளதால், யானைகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாலை 6:00 மணிக்குப் பின் அதிரப்பள்ளி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் நேற்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...