கோவை வடக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற உதவிய கழக நிர்வாகிகள், கட்சி தோழர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.



Coimbatore: கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த கழக நிர்வாகிகளுக்கும் அனைத்துக் கட்சி தோழமைகளுக்கும் மற்றும் வாக்காளர் பெருமக்களுக்கும் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் இன்று (அக்டோபர் 4) நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் தொ. ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் அசோக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சரத் விக்னேஷ், துடியலூர் பகுதி செயலாளர் அருள் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.



கோவை எம்பி கணபதி ராஜ்குமார் தனது நன்றியுரையில், "வடக்கு சட்டமன்ற தொகுதியின் மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல, நம் அனைவரின் கூட்டு முயற்சியின் வெற்றியாகும். இந்த நம்பிக்கைக்கு ஏற்ப நான் தொடர்ந்து உழைப்பேன்" என்று தெரிவித்தார்.



மேலும், வரும் காலங்களில் வடக்கு தொகுதியின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், மக்களின் குறைகளை களைய தொடர்ந்து பாடுபடுவதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்பியின் உரையை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...