கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில் அக்டோபர் 5ஆம் தேதி மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபர் 5) நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வேலை வாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டப் படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் பங்கேற்கலாம். ஊரகம் மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயது வரையுள்ள படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்பு, புகைப்படம், இதர தகுதிச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் பங்கேற்பவர்கள் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு மற்றும் நேரடி வேலை வாய்ப்பு பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...