தாராபுரம் அருகே ரூ.10.13 கோடி மதிப்பீட்டில் 20 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10.13 கோடி ஆகும்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.10.13 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த வளர்ச்சித் திட்டங்களில் பட்டத்திபாளையம் பகுதியில் ரூ.19 லட்சம், கருப்பன் வலசு பகுதியில் ரூ.30 லட்சம், மணலூர் பகுதியில் ரூ.2.97 கோடி, கந்தசாமிபாளையம் பகுதியில் ரூ.25 லட்சம், ஆயிகவுண்டன்பாளையம் ரூ.42 லட்சம், மாலமேடு பகுதியில் ரூ.39 லட்சம், லட்சுமி நகர் பகுதியில் ரூ.35 லட்சம், போளாரை பகுதியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.



இத்திட்டங்களில் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் திறப்பு விழா, ஆரம்ப துணை சுகாதார நிலையம் திறப்பு விழா, தார் சாலை அமைத்தல், பழுதடைந்த தார் சாலையை புதுப்பித்தல், பேருந்து நிறுத்தம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், சிறுவர் பூங்கா அமைத்தல் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான பழனிச்சாமி, மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், மூலனூர் பேரூராட்சி தலைவரும் மூலனூர் பேரூர் கழக செயலாளருமான மக்கள் தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...