கோவை கூடலூர் நகராட்சியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

கோவை கூடலூர் நகராட்சியில் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் அ.அறிவரசு காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா இன்று (அக்டோபர் 2) கொண்டாடப்பட்டது. கூடலூர் நகராட்சியின் 20வது வார்டு குறிஞ்சி நகர் குடியிருப்போர் சங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.



விழாவில் கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.



தனது உரையில் அறிவரசு, "அண்ணல் காந்தி அவர்கள் விரும்பிய ஒன்றுபட்ட இந்தியாவைக் காப்போம்" என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார், செயலாளர் சிவக்குமார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். அப்பகுதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...