கோவையில் விவசாயிகள் 100 நாள் தொடர் போராட்டம் தொடக்கம்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை கோரிக்கை

கோவை சூலூரில் விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி 100 நாள் தொடர் போராட்டம் தொடங்கியுள்ளனர். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.


கோவை: கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் 65 சதவீத விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பியும் அதனை சார்ந்த தொழில்களை நம்பியும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 65 சதவீதத்திற்கும் மேலாக உள்ளனர்.

தேங்காய் எண்ணெயை தமிழக அரசால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கால் நூற்றாண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை எந்த அரசும் செயல்படுத்தவில்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் 100 நாட்கள் 100 ரேஷன் கடை முன்பாக போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நேற்று (அக்டோபர் 1) சூலூரில் தொடங்கியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...