மஹாளய அமாவாசை: மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கூடி, பவானி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தி வழிபாடு நடத்தினர்.



கோவை: மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த திரண்டனர்.



அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பவானி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பவானி நதி மாதேஸ்வரன் மலைக்கோவில் அருகே அமைந்துள்ள இந்த நந்தவனம் காசிக்கு நிகராக கருதப்படுகிறது.

இங்கு தர்ப்பணம் செலுத்தினால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் மற்றும் குடும்பம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அமாவாசை அன்று பொதுமக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.



கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் காய்கறிகள், பழங்கள், பிண்டங்கள் வைத்து அர்ச்சகர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவற்றை பவானி ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபாடு நடத்தினர்.



ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆண்டும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் கூடி, தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் செலுத்தி மரியாதை செலுத்தினர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...