சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கோடை கால காய்கறி கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை கால விழாவை முன்னிட்டு தோட்டக்கலை சார்பில் ஒன்பதாவது காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசுமுதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இவ்விழாவில், பார்வையாளர்களை கவரும் வண்ணமாக 1500 கிலோ எடையுள்ள பல வண்ணங்களை கொண்ட குட மிளகாய்களை கொண்டு 25 அடி நீளம், 12 அடி உயரம், 6 அடி அகலம் உள்ள காய்கறி கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிலோ எடையுள்ள மஞ்சள் மற்றும் பச்சை சுகினியை கொண்டு 10அடி உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு அரங்கங்கள் அமைப்பட்டு அதில் கரடி, முயல், மான், மயில் போன்ற உருவ அமைப்புகள் காய்கறிகளால் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த காய்கறிக் கண்காட்சியில் சுமார் 25000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இக்காட்சியை கண்டு ரசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...