உடுமலை வனப்பகுதியில் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு: வனத்துறை விசாரணை தீவிரம்

உடுமலை அருகே வனப்பகுதியில் 20 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வனத்துறையினர் செடிகளை அழித்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நீராதாரங்களை ஆய்வு செய்யவும் வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தளி பிரிவுக்கு உட்பட்ட குழிப்பட்டி சுற்று பகுதியில் வனவர் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழவந்தான் மலை சரக பகுதியில் 2 மீட்டர் நீளமுள்ள 20 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கஞ்சா செடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. மேலும் ஆய்வக பகுப்பாய்விற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து உடுமலை வனச்சரகத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளூர் வாசிகளா அல்லது மர்ம நபர்களா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியில் கஞ்சா பயிரிடுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவடப்பு வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...