உடுமலையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதான குழாய் உடைப்பு காரணமாக அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களுக்கு 10 வார்டுகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் குடிநீர் விநியோகத்தில் இரண்டு நாட்கள் தடை ஏற்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுமலை நகராட்சியின் முதல் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களில் நகரின் வார்டு எண் 12, 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் தடை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...