உடுமலையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரதான குழாய் உடைப்பு காரணமாக அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களுக்கு 10 வார்டுகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் குடிநீர் விநியோகத்தில் இரண்டு நாட்கள் தடை ஏற்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடுமலை நகராட்சியின் முதல் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களில் நகரின் வார்டு எண் 12, 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் தடை காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...