கோவையில் தட்கல் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காததற்கு எதிர்ப்பு

கோவையில் தட்கல் திட்டத்தில் பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் புகார். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து, கோவை டாடாபாத் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளரை சந்தித்தனர். தட்கல் திட்டம் மற்றும் அனைத்து வகை வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.

விவசாயி அரசேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியம் தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி, விவசாயிகளுக்கு 90 நாட்களில் வேளாண் மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று அறிவித்தது. 5 HP-க்கு 2.5 லட்சம், 7.5 HP-க்கு 2.75 லட்சம், 10 HP-க்கு 3 லட்சம், 15 HP-க்கு 4 லட்சம் என கட்டணம் நிர்ணயித்துள்ளனர். ஆனால், 15 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் 90 நாட்களில் மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர்," என்றார்.

2022 வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், 90 நாட்களில் வேளாண் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், தற்போது தட்கல் திட்டத்தில் பணம் கட்டிய 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு பெறாமல் காத்திருப்பதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் உபகரணங்கள் இல்லை என்று கூறி காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களிலும், மின்சார வாரியத்திடம் பலமுறை நேரிலும், அஞ்சல் மூலமாகவும் புகார் அளித்தும் இரண்டு ஆண்டுகளாக ஒரு மின் இணைப்பு கூட வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...