ஆனைக்கட்டி பகுதியில் மண் எடுப்பு குறித்த ஆய்வு: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ஆனைக்கட்டி பகுதியில் மண் எடுப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு பற்றி விளக்கமளித்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி 19 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற உலக முதியோர்கள் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ஆனைக்கட்டி பகுதியில் நடத்தப்பட்ட மண் எடுப்பு குறித்த ஆய்வு பற்றி விளக்கமளித்தார்.

ஆட்சியர் கூறுகையில், "உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின் படி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து கோவையில் இரு தினங்களாக தொண்டாமுத்தூர், ஆனைக்கட்டி பகுதிகளில் மண் எடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மொத்தம் 19 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்பகுதியில் மண்ணின் தரம் குறித்தும், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும்," என்றார்.

ஆனைக்கட்டி பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, அங்கு செயல்படும் தனியார் ரிசார்ட் சம்பந்தமாக பொதுமக்கள் முறையிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், "அந்த ரிசார்ட் மீது ஒருசில பிரச்சினைகள் குறித்து மக்கள் சிலர் குறிப்பிட்டனர். குறிப்பாக வழித்தடங்கள் குறித்து தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன் முடிவெடுப்பார்," என்றார். மேலும், "ரிசார்ட் பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்," என்று உறுதியளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...