பாஜக உறுப்பினர் சேர்க்கை: 72 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கே.பி.ராமலிங்கம் தகவல்

கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.



கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.



அப்போது அவர் கூறியதாவது: "செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியமும் தெய்வீகமும் தான் பாஜகவின் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர்."

"தொடர்ந்து நேர்மையான ஒரு இயக்கம் பாரதத்தை ஆள வேண்டும். அப்படி நேர்மையாக ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. அதனால் தான் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்," என்று கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவர், "மொத்தமாக தமிழக அமைச்சர்கள் என்பது திருடர்கள் கூட்டம். புதிய திருடன் வந்தால் என்ன, பழைய திருடன் வந்தால் என்ன, எல்லாம் திருடன் தான். புரோக்கர் நல்லபடியாக யார் கமிஷன் பெற்று சபரீசன், உதயநிதிக்கு கொடுப்பார்கள் என்பது தான் செந்தில் பாலாஜி. கமிஷன் பெற்று தருவதில் வல்லவர்," என்றும் குற்றம் சாட்டினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...