பத்தாண்டு பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் 2014ல் தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். சாட்சிகள் நிரூபிக்கப்படாததால் கோவை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.



கோவை: கோவை ஜே எம் எண் 1 நீதிமன்றம் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட 7 பேரை பத்தாண்டுகால வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இந்த வழக்கு 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்டது.

2014ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, அங்கிருந்த அதிமுக கொடி கம்பம், பெயர்ப்பலகையை அடித்து உடைத்து அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக நா.கார்த்திக், மணிகண்டன், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.



பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், சாட்சிகள் நிரூபிக்கப்படாத காரணத்தால் அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நா.கார்த்திக்குக்கு திமுகவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நா.கார்த்திக், "பழிவாங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பொய் வழக்கு போடப்பட்டது. திமுகவின் செயல்பாடுகளை அடக்குவதற்காக அதிமுகவினர் திட்டமிட்டு பொய் வழக்கு போட்டிருப்பது நிரூபணமாகி இருக்கிறது. பத்து ஆண்டுகளாக பொய் வழக்கிற்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கியது வேதனையாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...