மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி: பவானி ஆற்றில் குதித்து தப்ப முயன்ற குற்றவாளி சிக்கினார்

மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்ப பவானி ஆற்றில் குதித்தார். எலும்பு முறிவு காரணமாக பிடிபட்ட அவர் மீது 16க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்த குற்றவாளி, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று பவானி ஆற்றில் குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிக்கினார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டார்னிங்டன் பகுதியைச் சேர்ந்த சசி (38) என்ற பெயிண்டர், தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளின் கிளட்ச் வயர் அறுந்துவிட்டது. அப்போது அவ்வழியே வந்த இளைஞர்கள் மூவர் உதவி செய்தனர். பின்னர் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.



சசி பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு மிரட்டினர். வாக்குவாதத்தின் போது, சூர்யா என்ற இளைஞர் கத்தியால் சசியை குத்தினார். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றனர். சசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சூர்யாவை (21) போலீசார் தேடி வந்தனர். இன்று மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் பகுதியில் அவரைக் கண்டுபிடித்த போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற சூர்யா, பவானி ஆற்றில் குதித்தார்.

குதித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...