அன்னூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பெண் ஆசிரியை போக்சோவில் கைது

கோவை மாவட்டம் அன்னூரில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


சௌந்தர்யா என்ற பெண் ஆசிரியை, அந்த பள்ளியில் சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளிடம் அநாகரிகமாகவும் அத்துமீறியும் நடந்து கொண்டதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரிடம் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கை மற்றும் தவறான தொடுதல் போன்ற முறையில் அத்துமீறியதாக தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனடியாக செயல்பட்ட பெற்றோர், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து அத்துமீறிய பள்ளி ஆசிரியை சௌந்தர்யா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


நாளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்புக்கு பெண்ணே அச்சுறுத்தலாக மாறிய இந்த சம்பவம் அன்னூர் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...