கோவை தெலுங்குபாளையத்தில் நொய்யல் ஆற்றின் கரைகளில் பனை விதைகள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கோவை தெலுங்குபாளையத்தில் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப தொடங்கி வைத்தார். இது மண்ணரிப்பைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பேரூர் சாலை தெலுங்குபாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப இன்று (30.09.2024) துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நீர் பிடிப்பு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும் குட்டை உள்ள பகுதிகளான காவிரிக் கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இன்றைய தினம் (30.09.2024) கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பேரூர் சாலை வார்டு எண் 76 தெலுங்கு பாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் அளவீடு செய்யப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக சுமார் 1000 பனை விதைகள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களிலும் பனை விதைகள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

இந்த பனை விதைகள் கோயம்புத்தூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25 மூலமாக பெறப்பட்டது.

இந்நிகழ்வில் தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த், உதவி இயக்குநர் நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, மாநகர தலைமைப் பொறியாளர் (பொ) முருகேசன், நகரமைப்பு அலுவலர் குமார், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், உறுப்பினர்கள் ராஜ்குமார், சிவசக்தி, வசந்தாமணி, உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தன்னார்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...